இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்கிரமரத்ன ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சபையின் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.