பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் PHIக்கள் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளனர்


எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு மற்றும் பானங்களை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) தெரிவித்துள்ளது.

சுமார் 1,750 பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

பண்டிகை கால உணவு உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், டிசம்பர் 01ஆம் தேதி முதல் PHIக்கள் நாடு முழுவதும் 150க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதியது பழையவை