தனது கல்வித் தகுதிச் சான்றிதழ்கள் அனைத்தையும் நாளை (18) காலை சபையில் சமர்ப்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் நாளை காலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளேன். பட்டப் பத்திரம் மட்டுமல்லாது ஏனைய அனைத்து மேலதிகச் சான்றிதழ்களும் கூட” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.