கடலோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது
byCeylon Puls
கல்கிசை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தண்டவாளம் பழுதடைந்துள்ளதால் கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கொழும்பு கோட்டைக்கு வரும் ரயில்கள் தாமதமாக வந்தன.
எவ்வாறாயினும், கொழும்பு கோட்டை வரை சேவையில் ஈடுபடும் அனைத்து அலுவலக புகையிரதங்களும் காலதாமதமின்றி கால அட்டவணைப்படி சேவையில் ஈடுபட்டதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.