முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று (20) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருகை தந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான ‘சேனல் 4’ ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்காக அழைப்பாணையை அடுத்து அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வந்திருந்தார்.