முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்த வழக்கின் விசாரணைகளை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 9 மில்லியன்.
பிரதிவாதிகளில் ஒருவரான சலோச்சன கமகே தனது சகோதரன் என்பதாலும், அதன் மூலம் நலன்களுக்கு முரண்பட்டவர் என்பதாலும் மேற்படி இலஞ்ச வழக்கின் விசாரணைகளை நீதிமன்றத்தால் முன்னெடுக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி, வழக்கு தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு பொருத்தமான மற்றுமொரு நீதவானை நியமிக்குமாறு நீதிச் சேவைகள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலஞ்சம் வாங்கும் போது கைது செய்யப்பட்ட மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சலோச்சன கமகே உள்ளிட்ட இருவரையும் 2025 ஜனவரி 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சனிக்கிழமை (28) உத்தரவிட்டார்.
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் வர்த்தகர் மற்றும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நகர அபிவிருத்தி அதிகார சபையினால் (UDA) கையகப்படுத்தப்பட்ட டொரிங்டன் அவென்யூவில் உள்ள முறைப்பாட்டாளரின் உறவினரின் காணிக்கு இழப்பீடு வழங்குவதை துரிதப்படுத்துவதாக உறுதியளித்ததன் பேரில் பிடகோட்டேயிலுள்ள மற்றுமொரு வர்த்தகரிடம் இருந்து 09 மில்லியன்.