ரயில் மூலம் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் புகையிரத தலைமையகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், திணைக்களத்தில் நிலவும் ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உடனடி தீர்வு வழங்கப்படுமென தெரிவித்தார்.
இதேவேளை, புகையிரத தாமதங்கள் மற்றும் புகையிரத கோளாறுகளை தடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், புகையிரத சேவைகளை மேம்படுத்துவதற்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மருதானை புகையிரத நிலையத்தில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (12) கொழும்பு துறைமுகத்தில் விசேட கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க, துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை (ECT) ஜூன் 30, 2025க்குள் பூர்த்தி செய்வதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும். .