அசோக ரன்வலவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய சபாநாயகர் நியமனம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி இடம்பெறும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமனம் தொடர்பான வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவி விலகுவது இதுவே முதல் தடவை என பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜினாமா அறிவிப்பை சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் அல்லது ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க முடியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
ஜனாதிபதி ராஜினாமா கடிதத்தைப் பெற்றவுடன், அதை ஏற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி முடிவெடுக்க முடியும்.
சபாநாயகரின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டால், புதிய சபாநாயகர் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்த நியமனம் சாதாரண சட்டத்தின்படி வாக்களிப்பு அல்லது நியமனம் மூலம் வழங்கப்படலாம் என பேராசிரியர் மஹாநாமஹேவா மேலும் தெரிவித்தார்.