இந்த வருடத்தில் இதுவரை சுமார் 1.9 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 90,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக SLTDA தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் மேலும் 250,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என SLTDA எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் 2.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காகக் கொண்டு SLTDA இலக்கு வைத்துள்ளதாகவும் ஹேவாவசம் மேலும் தெரிவித்தார்.