2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, பிரதிவாதிகளுக்கு ரூ. 75,000 இழப்பீடாக மனுதாரருக்கு வழங்க வேண்டும்.
இந்த வழக்கின் பிரதிவாதிகளாக முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அப்போதைய பணிப்பாளர் (CID) ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.