இலங்கை அச்சகத் திணைக்களத்தின் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டது


இலங்கை அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டு அதன் தரவுகள் மாற்றப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) தற்போது சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

இதேவேளை, இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனலும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சேனலுக்கான அணுகலை உடனடியாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
புதியது பழையவை